ஆசையாக வாங்கிய வெங்காய போண்டா சாப்பிடும் நேரத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அடைந்த மக்கள்

Update: 2024-10-26 13:01 GMT

ஆசையாக வாங்கிய வெங்காய போண்டா சாப்பிடும் நேரத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அடைந்த மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் போண்டாவிற்குள் பிளாஸ்டிக் கவர் இருந்ததாக கூறி, வாடிக்கையாளர், கடைகாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்குள்ள பெட்ரோல் பங்கே அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி டீ ஸ்டாலில், இளைஞர்கள் போண்டா வாங்கியுள்ளனர். அதில் சிக்கன் மசாலா பிளாஸ்டிக் கவர் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தரமற்ற முறையில் உணவு பொருள் விற்கும் கடை மீது உணவு பாதுபாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்