கோவை ஈஷா மையம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த ரிப்போர்ட்

Update: 2024-10-17 07:30 GMT

கோவை ஈஷா மையம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த ரிப்போர்ட்

கோவை ஈஷா மையத்தில் நடத்தப்பட்ட புலன்விசாரணை விவரங்களை நிலை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை அறிக்கையில், விசாரணை குறித்து முன்கூட்டியே ஈஷா மையத்திற்கு தெரியப்படுத்தபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு சென்ற காவலர்கள் சீருடையிலும், விசாரணை நடத்திய அதிகாரிகள் சாதாரண உடையிலும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈஷா யோகா மையத்தில் நடத்தப்பட்ட புலன் விசாரணை குறித்து வீடியோ பதிவு செய்து பிரமாண பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கான காலக்கெடு குறைவாக இருந்ததால், 120 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்