நினைத்து பார்க்காத விசித்திர மரணம்...இப்படியெல்லாம் ஒருவருக்கு சாவு வருமா?

Update: 2024-10-22 05:39 GMT

நினைத்து பார்க்காத விசித்திர மரணம்... இப்படியெல்லாம் ஒருவருக்கு சாவு வருமா? - சில விநாடிகளில் குடும்பமே அனாதை

ஊரில் நடக்கும் திருவிழாவை ஆசையாக பார்க்க சென்ற ஒருவரின் வாழ்க்கை ஒரு விபத்தால் சிதைந்து அவரின் குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கிறது. எங்கே நடந்த சம்பவம் இது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரைக்கு திருமணம் நடந்து இரண்டு வருடம் தான்

முடிந்து இருக்கிறது. நெல் அறுவடை இயந்திரத்தின் ஒட்டுநராக வேலை பார்த்து வந்த நிலையில் குடும்பத் தேவைகளுக்காகக் கடலூர் மாவட்டம் பல்லவராயநத்தம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அருகில் ஊரில் நடைபெறும் திருவிழாவை பார்ப்பதற்காக இரு சக்கரவாகனத்தில் கடலூர் நோக்கிச் சென்று இருக்கிறார். அப்போது நெல்லிக்குப்பம் அருகே சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ராஜதுரை மோதியதில் மாட்டின் கொம்பு குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் மாட்டின் கொம்பு உடைந்த காட்சிகளும் விபத்தின் கோரத்தை நமக்கு காட்டியிருக்கிறது.

ராஜதுரையின் உடல் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் இது குறித்து மாட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் ராஜதுரையின் குடும்பமே அனாதையாகி இருப்பதாக உறவினர்கள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின் போது மாட்டின் உரிமையாளரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் தலைவனை இழந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்