"ஒரு குடும்பத்துக்கு ரூ.5 கோடி கொடுங்க".. ஒன்று திரண்ட ஊர்.. குமரியில் பரபரப்பு

Update: 2024-10-06 09:43 GMT

குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் எடுப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த‌தை தொடர்ந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த கருத்துக்கேட்புக் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த‌து. இந்நிலையில், மணல் எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிடக்கோரி, பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர். சின்னத்துறை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலய வளாகத்தின் முன்பு திரண்ட பொதுமக்கள், இத்திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்