16 வயது நர்சிங் மாணவி திடீர் கர்ப்பம்..3 பேர்.. அநேக இடங்கள்.. ஆடிப்போன தாய்..

Update: 2024-10-24 06:10 GMT

16 வயது நர்சிங் மாணவி திடீர் கர்ப்பம்..3 பேர்.. அநேக இடங்கள்.. ஆடிப்போன தாய்.. தலைசுற்ற வைக்கும் கதை

பதினாறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் ரித்தீஷ், குலசேகரன் உட்பட மூவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் நர்சிங் படித்து வரும் 16 வயது சிறுமியுடன் மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தது அவரது தாய்க்குத் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். சிறுமியிடம் இதுதொடர்பாக தாய் கேட்டபோதுதான் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் ரித்தீஷ் உட்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்