சாமி மீதே கை வைத்த நபர்.. கோயிலை திறந்ததும் அர்ச்சகருக்கு அதிர்ச்சி - குவிந்த போலீஸ்

Update: 2024-10-07 02:31 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மர்மநபர்கள் கோயிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை

உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான

சிவன் கோயில் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற அக்கோயிலில் அர்ச்சகர்

வழக்கம் போல் பூஜை செய்ய வந்துள்ளார். கோயில் கதவை

திறந்து பார்த்த போது உள்ளே இருந்த துர்க்கை அம்மன்

உள்ளிட்ட சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தடயவியல் நிபுணர்களுடன் உடனடியாக கோயிலுக்கு விரைந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோயிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள்

சாமி சிலைகளை சேதப்படுத்தி சுவற்றில் எதையோ

கிறுக்கி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள்

கோயில் அருகே குவிந்ததால் கூடுதல் போலீஸ்

பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்