ஒரே நாளில் 4 அடி அதிகரித்த உயரம்.. தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்த ஓசூர் மக்கள்

Update: 2024-10-24 13:11 GMT

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கர்னூர் பகுதியில் சாலை ஓரத்தில் 4 அடி உயரத்தில் பயணிகள் நிழல் கூடம் அமைக்கப் பட்டிருந்தது... இதில் பயணிகள் நிற்க முடியாது... அமர மட்டுமே முடியும்... இது குறித்து நமது தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பி இருந்தோம்... அதன் எதிரொலியாக

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் நேரடியாக அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்... அதனைத் தொடர்ந்து 4 அடி உயரத்தில் இருந்த பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்பட்டு 8 அடி உயரத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நமது தந்தி டிவிக்கு தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பேருந்து நிறுத்தத்தின் கீழ் பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதால் அதன் உயரம் 4 அடியாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்