சிக்கி தவிக்கும் 25 மீனவர்கள்.. கறார் காட்டும் இலங்கை நீதிமன்றம் | Tamilnadu Fishermen | Thanthitv

Update: 2024-07-15 12:14 GMT

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 1ம் தேதி மீன் பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுகளையும் அதில் இருந்த 25 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

25 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் 15ஆம் தேதி முதல் இன்று வரை 24 மீனவர்களை மட்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒரு மீனவர் 18 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்ததை அடுத்து அவரை சிறுவர் காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டார்...

சிறை காவல் தேதி முடிந்து 2வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் வருகின்ற 29ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்