வாய்க்காலில் ஆக்கிரமிப்பு.. - JCB மூலம் வீடுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்..
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர்,
சக்கரபாளையம் பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில், நீர்
வளத்துறைக்கு சொந்தமான 4.50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி
செய்து கொள்ள கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியும், வீடுகள் காலி செய்யப்படவில்லை. இந்நிலையில் வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் 10 வீடுகளிலும் இருந்த பொருட்களை வெளியேற்றி விட்டு, மின் இணைப்பை துண்டித்து விட்டு, பொக்லைன் உதவியுடன் இன்று வீடுகளை இடித்து அகற்றினர். வாய்கால்
ஓரத்தில் 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள, 4.50 ஏக்கர் நிலம்
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டன.