பள்ளி மாணவர்களுக்கு இந்த நிலையா? - வேதனையில் கிராம சிறார்கள்

Update: 2024-08-17 02:37 GMT

பர்கூர் மலை பகுதியில் உள்ளது இருட்டி என்கிற மலைகிராமம். இந்த கிராமத்தில் உள்ள சிறார்கள் தேவர்மலை பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் பாதையில் இருந்த பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பாலம் இல்லாத காரணத்தால் அரசுபேருந்தால் இந்த வழியாக வர முடியவில்லை. இந்நிலையில் இருட்டி மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பத்து கிலோ மீட்டர் நடந்தும், ஒரு சில நேரங்களில் டிராக்டரில் ஏறியும் பள்ளிக்கு செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்