தசரா முதல் நாளிலேயே பரபரப்பை கிளப்பிய சம்பவம்.. 5 பேர் கைது

Update: 2024-10-06 15:41 GMT

திருச்செந்தூர் அருகே, தசரா திருவிழாவின் கொடியேற்றத்தின் போது, இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஐவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், கடந்த 3 ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது, கடற்கரையில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில், இரு தரப்பும், ஒருவரையொருவர் கம்புகளால் தாக்கி மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்