சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் | Cm STalin

Update: 2024-09-20 08:05 GMT

சிந்து சமவெளி நாகரீக கண்டுபிடிப்பின் 100வது ஆண்டை ஒட்டி தொல்லியல் துறை அதிகாரி சர் ஜான் மார்ஷலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று சர் ஜான் மார்ஷல், இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த நிலையில் நன்றியுடன் திரும்பிப் பார்த்து நன்றி கூறுவதாக தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று தான் அறிவித்ததை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்