போதைப்பொருள்.. ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்த துணை ஆணையர்

Update: 2024-09-20 08:04 GMT

பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான குழுவை அமைப்பதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டார்.சென்னையில் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களோடு மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், போதைப் பொருளுக்கு எதிரான கமிட்டி ஒன்றை அனைத்து பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும்... அந்தக் குழுவில் ஆசிரியர்கள், நம்பிக்கையான மாணவர்கள் மற்றும் அந்தந்த பகுதி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசாரை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மாணவர்களின் நடத்தையை கண்காணித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்