சென்னையில் டாஸ்மாக் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற இருவர்.. விசாரித்த போலீஸ்.. ஷாக் பின்னணி

Update: 2024-07-24 06:03 GMT

புதுச்சேரியில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள மதுபான கடை அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 500 போதை மாத்திரைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அசோக் நகர் பகுதியை சேர்ந்த தர்ஷன், சிதம்பரம் என்பதும், புதுச்சேரியில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்