வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-20 17:25 GMT

உளுந்தூர்பேட்டை அருகே, வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர். குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், செம்மனந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். செம்மனந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிலர் ஏரியில் மண் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு முருகன் சென்றுள்ளார். அப்போது அவரது கேள்விகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி, அவரை தாக்க முயன்றார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், முருகனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்