ஓட்டுனரின் உயிரை பறித்த பேருந்து..சம்பவ இடத்திலேயே எமனை சந்தித்த நபர்..| Chennai

Update: 2024-10-09 16:46 GMT

சென்னை கிண்டியில், மாநகர பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற மாநகர பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


வேளச்சேரியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், மாநரகப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பிற்பகலில் வேலைக்குச் செல்வதற்காக, வேளச்சேரியில் இருந்து சைதாப்பேட்டையில் உள்ள பணிமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிண்டி நேரு நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த, தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்லும் மாநகர பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் மீது மாநகர பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக, வேளச்சேரி- சைதாப்பேட்டை சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்