மொபைல் கேம் ஆடிய வெறியில் வீடுகளை பஸ்பமாக்கிய 5 இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-09-19 08:06 GMT

சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட மோதலில் குடிசைகளை கொளுத்திய 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம், நியூ ஆவடி சாலையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரின்ஸ், சச்சின் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஆன்லைன் கேமில் மூழ்கி இருந்த பிரின்ஸ் மற்றும் சச்சினை பிரின்சின் சகோதரர் நிவாஸ் அடித்து கண்டித்துள்ளார். இதைப்பார்த்த சச்சினின் உறவினர் அப்பு என்பவர் நிவாசை தாக்கி உள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த நிவாஸ், அப்புவை தாக்க முயன்றபோது அவர் ஓடி குடிசை வீட்டுக்குள் ஓடி ஒளிந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பருடன் சேர்ந்து குடிசைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட மோதலில் குடிசைக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்