காரில் வந்து ஆடுகளை திருடிய 3 பேர் கைது

Update: 2024-09-27 12:25 GMT

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் ஆகியோர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த13-ஆம் தேதி, அவர்களின் ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த 3 பேர், 3 ஆடுகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து மணிகண்டனும், கணேசனும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, ஆடுகளைத் திருடியது, பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தை சேர்ந்த மொய்தீன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சியில் விற்பனைக்கு வந்த காரை 5 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கிச் சென்றபோது, பெரம்பலூர் செல்லும் வழியில் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, மொய்தீன் மற்றும் காரை விற்றவர் உள்பட 3 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதானவர் ஆடுகளைத் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்