தஞ்சையில் பிரிந்த மூச்சு ... சென்னையில் மீண்டும் மறுபிறவி எடுத்த இளம் பெண்... டாக்டர்கள் நடத்திய அதிசயம்

Update: 2024-10-22 01:57 GMT

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 57 மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நான்கு மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.இந்த நிலையில்,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான இளம் பெண்ணுக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நுரையீரல் பொருத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான இளம் பெண்ணுக்கு, தஞ்சையில் மூளை சாவு அடைந்த ஒருவரின் இரண்டு நுரையீரல் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நுரையீரல், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினரால், நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு நுரையீரலும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதையடுத்து இளம்பெண் தற்போது ஆக்ஸிஜன் இல்லாமல் ஆரோக்கியமாக சுவாசித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்