சென்னையில் பிரியாணி சாப்பிடுபவர்களை கதிகலங்க வைத்த அதிர்ச்சி செய்தி

Update: 2024-09-19 11:33 GMT

கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஏராளமான பொதுமக்கள் பிரியாணி வாங்கி உள்ளனர். புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாள் என்பதால் அதிக கூட்டம் வந்துள்ளது. இந்நிலையில் அங்கு பிரியாணி சாப்பிட்ட சிலருக்கு உடல் உபாதை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பிரியாணி கடை மீது சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், கொடுங்கையூர் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்