சென்னையை கதிகலங்க வைத்த படுகொலை.. நெல்லையில் ரவுடி காக்கா கைது

Update: 2024-07-25 03:05 GMT

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடியின் தீவிர ஆதரவாளரை போலீசார் நெல்லையில் வைத்து கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லியில் வைத்து, ரவுடி முத்துச் சரவணன் என்பவர் கடந்தாண்டு போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த முத்துச் சரவணின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட ரவுடி காக்கா என்ற வைரமணியை தற்போது நெல்லையில் வைத்து போலீசார் கைது செய்திருக்கின்றனர். நெல்லையில், ரவுடிகளை களையெடுக்கும் பணியை போலீசார் தனிப்படை அமைத்து துவங்கி இருக்கும் நிலையில், தனிப்படை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரிலே ரவுடி வைரமணி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலுவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புன்னை பாலுவுடன், இந்த வைரமணி நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வைரமணிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வைரமணி மீது 2 கொலை வழக்குகள் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்