ஜாலியாக விளையாடிய 7 வயது சிறுவன்... அடுத்த நொடியே திணறி நின்ற மூச்சு - சென்னை அருகே பெரும் சோகம்

Update: 2024-10-07 07:47 GMT

ஜாலியாக விளையாடிய 7 வயது சிறுவன்... அடுத்த நொடியே திணறி நின்ற மூச்சு - சென்னை அருகே பெரும் சோகம்

சென்னை அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மேலக்கோட்டையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக்கின் மகனான 7 வயது துரை ராஜ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்... அவ்விடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு இருந்த நிலையில், சிறுவன் பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலக்கோட்டையூர் பகுதியில் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முன்வந்த நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிறுவன் பலியானது அப்பகுதி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது... இதனால் மீண்டும் அவ்விடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர். பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்