"பாஜக அலுவலகத்தில் தீபாவளி சீட்டு" ரூ.3 கோடிகளை சுருட்டி திடீர் மாயம்..பெண்கள் சாலை மறியல் பரபரப்பு

Update: 2024-10-19 07:34 GMT

"பாஜக அலுவலகத்தில் தீபாவளி சீட்டு" ரூ.3 கோடிகளை சுருட்டி திடீர் மாயம்..பெண்கள் சாலை மறியல் பரபரப்பு

பாஜக அலுவலகத்தில் தீபாவளி சீட்டு"

அந்த ஒரு வார்த்தை...கொட்டிய கோடிகள்

"ஐய்யோ... எங்க பணமெல்லாம் போச்சே.."

பாஜக அலுவலகத்தில் வைத்து சீட்டு நடத்தி வந்தவர் மூன்று கோடி ரூபாயுடன் தலைமறைவானதால் பணத்தை மீட்டுத் தரக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மன்னரைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கருமாரம்பாளையம் பாஜக கட்சியின் கிளை அலுவலகத்தில்

தீபாவளி சீட்டு உட்படப் பல ஏலச்சீட்டுக்களை நடத்தி வந்து இருக்கிறார். கட்சி அலுவலகத்தில் வைத்து சீட்டு நடத்தியதால் பலரும் நம்பி இவரிடம் சீட்டுப் போட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறார். தீபாவளி சீட்டு முதிர்வடைந்து பொது மக்களுக்குப் பொருட்களை வழங்க வேண்டிய நேரத்தில் அலுவலகத்தை மூடிவிட்டுத் தலைமறைவானார். மேலும் அலுவலகத்திலிருந்த பாஜக கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளைக் கிழித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ஏராளமான பெண்கள் உட்படப் பலர் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்