பைக்குடன் சேர்த்து தீ வைத்து எரிக்கப்பட்ட இளைஞர் - விசாரணை

Update: 2024-09-22 13:21 GMT

திருச்சியில், பைக்குடன் சேர்த்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, வயலூர் சாலை உயங்கொண்டான் திருமலை அருகே இளைஞர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்றிருக்கும் நிலையில், இளைஞரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்