நோயாளிக்கு பணம் வழங்கி உதவிய அமைச்சர் மா.சு - ஹாஸ்பிடலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2024-09-22 13:30 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனைகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு வந்த நோயாளிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்பளிப்பாக பணம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்