துணை நிலை ஆளுநராக தமிழிசை செலவழித்த தொகை?

Update: 2024-10-03 13:38 GMT

துணை நிலை ஆளுநராக தமிழிசை செலவழித்த தொகை?

#tamilisaisoundararajan #puducherry #thanthitv

புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 2 கோடியே 99 லட்சம் செலவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த அசோக் ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது தமிழிசை செளந்தரராஜனுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரி செந்தில்குமார் அளித்துள்ள பதிலில், உணவு, மளிகை, எரிவாயு, வாகனங்களுக்கு எரிபொருள், பராமரிப்பு, விமான செலவு உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக, 2021- 22 -ம் ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாயும், 2022-23 ம் ஆண்டில் 75 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023- 24 ம் ஆண்டில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழிசைக்கு வந்த பரிசுப் பொருட்கள் குறித்த தகவல், இச்செயலகத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்