முதலமைச்சர் வருவதாக வெளியான தகவல் - திடீரென குவிந்த மக்கள் - திணறிய கலெக்டர் ஆபீஸ்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு நிலவியது...

Update: 2022-05-23 12:35 GMT
முதலமைச்சர் வருவதாக வெளியான தகவல் - திடீரென குவிந்த மக்கள் - திணறிய கலெக்டர் ஆபீஸ்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு நிலவியது. அங்கு, திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்தனர். அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டனர். இதனிடையே, வரும் 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க தென்காசி வரவுள்ளதாக, நாளிதழில் செய்திகள் வெளியானதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்