"லாரன்ஸ் அரவணைப்பில் வளர்ந்த மாணவர்"+2 தேர்வு எழுதுவதை எண்ணி மகிழ்ந்த லாரன்ஸ்

தனது அரவணைப்பில் வாழ்ந்த மாணவர், முதன்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதை எண்ணி நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ந்துள்ளார்.

Update: 2022-05-05 09:16 GMT
தனது அரவணைப்பில் வாழ்ந்த மாணவர், முதன்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதை எண்ணி நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ந்துள்ளார். ஷ்யாம் என்ற 12ம் வகுப்பு மாணவரின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள லாரன்ஸ், ஒரு வயதாக இருக்கும் போது தன்னிடம் வந்ததாகவும், தற்போது அவர் தோளுயர வளர்ந்து 12ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகியுள்ளது வாழ்நாளில் தான் படைத்த மிகப்பெரிய சாதனை என உணர்வதாகவும் நெகிழ்ந்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்