வாலாஜாபாத் அருகே திடீர் கலவரம் - ஒத்திகை என தெரிந்ததால் பொதுமக்கள் நிம்மதி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே திடீரென 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-09 14:01 GMT
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியதுடன், பொதுமக்களும் அச்சமடைந்தனர். மேலும், போலீசார் மற்றும் அதிரடி படையினரும் அங்கு வந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் மேலும் பரபரப்பு சூழ்ந்தது. இறுதியில், அனைத்தும் கலவர தடுப்பு ஒத்திகை என தெரியவர, அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்