பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு - திறப்பு விழாவில் அதிக அளவில் கூட்டம் கூடியதாக புகார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-01 06:46 GMT
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, அதிக அளவில் கூட்டம் கூடியது, கொரோனாபரப்பும் சூழ்நிலையை உருவாக்க காரணமாக அமைந்தது உள்ளிட்ட நோய் தொற்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்