ஓடும் வாகனத்தில் விடைத்தாள் மாற்றிய நபர் - சென்னை இடைத்தரகரை பிடிக்க தீவிரம்

குரூப் 4 முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2020-01-27 13:16 GMT
குரூப் 4 முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பல கட்ட விசாரணையில், ஓடும் வாகனத்தில் விடைத்தாள் மாற்றியது இவர் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிடிபட்டால்தான் குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வரும் சிபிசிஐடி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்