குரூப் 1 தேர்வில் மோசடி? - 4 பல்கலை.கள் மீது பாய்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Update: 2024-10-22 08:16 GMT

குரூப்-1 தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.

குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம்,

மெட்ராஸ் பல்கலைக்கழகம்.

4 பல்கலைக்கழகங்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்து நீதிபதிகள் உத்தரவு.

குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் குற்றவியல் வழக்கு தொடரப்படும்- நீதிபதிகள்

பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு.

வழக்கு குறித்து முழுமையாக விசாரணை செய்து நிலை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.

மதுரை சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

அதில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கக் விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு, "

அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம்,

மெட்ராஸ் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து விபரங்கள் வழங்கப்படாததால் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அடிப்படை விபரங்களைக் கூட பல்கலைக்கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்து அடித்து வருகின்றன. ஆகவே அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை இந்த வழக்கில் தானாக முன்வந்து சேர்த்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த உத்தரவின் பேரில் தேவையான ஆவணங்களை பெற ஒரு நபரை நியமிக்கவும் உத்தரவிட்டனர். மேலும்,

விசாரணைக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மேலும் கால அவகாசம் வழங்க விரும்பவில்லை.

குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும்.

ஆகவே, விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை முகமைக்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்