கையில் விலங்கோடு போலீஸ்.. கைதாகும் இர்பான்?

Update: 2024-10-22 08:28 GMT

செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மருத்துவ சேவைப்பிரிவின் இணை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இர்பான் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றவர்கள் குறித்த விவரங்கள் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் செம்மஞ்சேரி போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் இர்ஃபான் கைதாகக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்