காமராஜர் சிலை அவமதிப்பு விவகாரம் : எர்ணாவூர் நாராயணன் கண்டனம்

காமராஜர் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான நபர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-12-30 08:49 GMT
காமராஜர் சிலை அவமதிப்பு வழக்கில் கைதான நபர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார். திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு, அனைத்து தரப்பு மக்கள் படிப்பதற்கு வழி வகை செய்தவர் காமராஜர் என பெருமையாக கூறினார். இனி, எந்த ஒரு தலைவர்களின் சிலையும் அவமதிக்கப்படாமல், பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்