தமிழக மீனவர்கள் 13 பேர் நடுக்கடலில் கைது : இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், 3 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.

Update: 2019-12-28 23:20 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த  மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி13 மீனவர்களை  கைது செய்து , 3 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். காங்கேசன்துறை  கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் விசாரணைக்கு பின்  யாழ் நீரியல் துறை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளனர். மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இலங்கை அதிபராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பிறகு அந்நாட்டு கடற்படையினர் நடவடிக்கை இல்லாத நிலையில் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மீனவர்களின் உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்