செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-12 23:15 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனு குறித்து ஜனவரி 23ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்