37 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட நடராஜர் சிலை

ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Update: 2019-10-05 18:56 GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்பாள் கோயிலில் காணமல் போன இந்த சிலையை, கடந்த மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு குழுவினர் மீட்டு கொண்டுவந்தனர். சிலையை மேள தாளங்களுடன் வரவேற்ற கோயில் நிர்வாகம், நடராஜருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்