"தாயகத்தில் தமிழை உயர்த்துங்கள்" - பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை

தாயகத்தில் தமிழை உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-09-28 07:50 GMT
தாயகத்தில் தமிழை உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஐ.நா சபையில் பிரதமர் மோடி தமிழில் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது பொதுச்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புறநானூற்றில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளிர் " எனும் வரியினை மேற்கோள் காட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்