தமிழகத்தில் மேலும் ரூ.3,750 கோடி முதலீடு - "10,800 இளைஞர்களுக்கு வேலை" : முதல்வர் உறுதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் துபாய் பயணம் மூலம், தமிழகத்திற்கு மேலும் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.

Update: 2019-09-09 20:44 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் துபாய் பயணம் மூலம், தமிழகத்திற்கு மேலும் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. துபாய் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 800 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்