கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட போலி பத்திரிக்கையாளர் கைது

பத்திரிக்கையாளர் போர்வையில் திருட்டு இருசக்கர வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கருடன் வலம் வந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-08 12:04 GMT
பத்திரிக்கையாளர்  போர்வையில் திருட்டு இருசக்கர வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கருடன் வலம் வந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ராஜேஷ், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பத்திரிகையாளர் என்ற போர்வையில் வலம் வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கேரளா மாநிலம் கொல்லத்தில் பல திருட்டு சம்பவங்களில் அவர் ஈடுபட்டு இருந்ததும் அப்போது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்