முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2019-07-28 08:59 GMT
அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். வேலூரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதலமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பலர் வாழ்த்து பெற்றனர். இதையடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  கட்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்