தவறான பெயர், முகவரியுடன் பாஸ்போர்ட்... 24 ஆண்டுகளாக பயன்படுத்திய பயணி சிக்கினார்

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தவறான பெயருடைய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அதிகாரியிடம் சிக்கினார்.

Update: 2019-07-28 02:10 GMT
சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தவறான பெயருடைய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அதிகாரியிடம் சிக்கினார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரை வந்த ராமசாமி என்பவரிடம் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர்.  பாஸ்போர்ட் எடுக்கும் போதே தவறான பெயர் மற்றும் முகவரியில் எடுத்ததாகவும், 24 ஆண்டுகளாக இதனை தான் பயன்படுத்தியதாகவும் ராமசாமி ஒப்புக்கொண்டார். அவரது உண்மையான பெயர் பொன்னம்பலம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்