ஆழ்துளை கிணறு அமைக்க கோரி காலிக்குடங்களுடன் புகார் அளித்த கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-05-28 04:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த சின்னதாளாப்பள்ளி,ஒண்டியூர் உள்ளிட்ட கிராம மக்கள், ஆழ்துளை கிணறு அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்