ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு : விசாரணையை நாளை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.

Update: 2019-01-21 11:39 GMT
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்