பேஸ்புக்கில் போட்ட பதிவு..! கமெண்டில் வெடித்த கலவரம்.. மகளிரணி தலைவிக்கு அடி, உதை, செருப்பு மாலை..

Update: 2024-09-20 12:15 GMT

பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிரணி தலைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஆவார் சீதாமார்ஹி மாவட்டத்தில் பைர்கனியா பகுதியில் அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு காமினியை அழைக்கவில்லை என்பதால், ஆத்திரமடைந்த காமினி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால் கமென்ட் பாக்சிலேயே வாக்குவாதம் எழுந்த நிலையில்

அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சய் சிங்கின் வீட்டுக்கு காமினி சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். முடிவில் கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து காமினியைத் தாக்கி, செருப்பு அணிவித்து தெருவில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. வீடியோவில், காமினியின் முகம் வீங்கிய நிலையிலும், உடலில் காயங்களுடனும், காணப்படுகிறார். சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் காமினி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சஞ்சய் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்