காதலியை நம்பி லட்சங்களை கொடுத்த காதலன்.. மொத்தத்தையும் சுருட்டி வெளிநாட்டில் கணவனோடு செட்டில்

Update: 2024-09-20 11:41 GMT

காதலிப்பதாக நாடகமாடி 21 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகையை பெண் ஒருவர் ஏமாற்றியதாக, இளைஞர் ஒருவர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த காட்வின் என்பவர், நாகர்கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், கல்லூரி பயிலும்போது, பேருந்தில் பழக்கமான பெண் ஒருவரை காதலித்த‌தாகவும், அவ்வபோது அந்த பெண்ணுக்கு செலவு செய்து பணம் கொடுத்த‌தாகவும் தெரிவித்துள்ளார். மொத்தமாக 21 லட்சம் வரை கொடுத்துள்ளதாகவும், 20 சவரனுக்கு மேல் நகைகளை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு அந்த பெண் ஏமாற்றியதாகவும், தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். கணவருடன் வெளிநாட்டுக்கு சென்ற அந்த பெண்ணிடம் இருந்து, தான் இழந்த பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கி பரிவர்த்தனை, வாட்ஸ் அப் மெசேஜ்களை ஆதாரங்களை கொடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்