நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை - ரயில்வே அமைச்சகம்

கஜா புயல் நிவாரண பொருட்களை ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Update: 2018-11-28 02:04 GMT
கஜா புயல் நிவாரண பொருட்களை ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. புயல் நிவாரண பொருட்களுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு உள்ளும், வெளிமாநிலங்களில் இருந்தும் நிவாரண பொருட்களை அனுப்ப டிசம்பர்10ஆம் தேதி வரை கட்டணம் இல்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்