இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சர்கார் பட இயக்குனர் முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-08 08:14 GMT
சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் காட்சிகளை வைத்துள்ளதாக இயக்குனர் முருகதாஸ் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேவராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். படத்தில், அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்களை தீயில் வீசும் காட்சியில், இயக்குனர் முருகதாஸ் நடித்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவசங்களை பெற்ற மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் அந்தக் காட்சி இருப்பதால், முருகதாஸ் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார்தாரர் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்