பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு - நடனமாடி அசத்திய `தங்கமகன்' மாரியப்பன்

Update: 2024-09-18 16:15 GMT

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு - நடனமாடி அசத்திய `தங்கமகன்' மாரியப்பன் - மேடையில் அம்பு எய்து அசத்திய ஷீத்தல் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் ஷீத்தல் தேவி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பள்ளி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, பள்ளி மாணவருடன் இணைந்து மாரியப்பன் உற்சாகமாக நடனமாடினார். மேலும், ஷீத்தல் தேவி மாணவர்கள் முன்னிலையில் அம்பு எய்து அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்