துலீப் கோப்பை - இந்தியா D அணியை வென்ற இந்தியா A அணி

Update: 2024-09-16 00:01 GMT

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா D அணியை இந்தியா A அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அனந்தபூரில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா A அணி 290 ரன்களும் இந்தியா D அணி 183 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்தியா A அணி 380 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதாம் சிங் மற்றும் திலக் வர்மா சதம் விளாசினர். 2வது இன்னிங்சில் இந்தியா D அணி 301 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா A அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்